Published : 14 Oct 2021 05:57 AM
Last Updated : 14 Oct 2021 05:57 AM

புவிசார் குறியீடு பெற்ற - திருபுவனம் பட்டுக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு :

புவிசார் குறியீடு பெற்ற திருபுவனம் பட்டுக்கு சிறப்பு அஞ்சல் உறை நேற்று வெளியிடப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவ னம் பட்டு சேலைக்கு கடந்த 2019-ல் புவிசார் குறியீடு கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக, 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, புவிசார் குறியீடு பெற்ற பொருட் களுக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி, புவிசார் குறியீடு பெற்ற திருபுவனம் பட்டுக்கு நேற்று ரூ.25-க்கான சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு நிகழ்ச்சி திருபுவனத்தில் நடைபெற்றது. சிறப்பு அஞ்சல் உறையை தமிழ்நாடு அஞ்சலக வட்ட இயக்குநர் பி.ஆறுமுகம் வெளியிட, தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம்.பி செ.ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவின்போது அஞ்சல் துறையின் மேகதூதம் அஞ்சல் அட்டையில் ‘திகோ சில்க்ஸ்’ விளம்பரம் வெளியிடுவதற்கான காசோலை அஞ்சல் துறைக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக, கும்பகோணம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பா ளர் எஸ்.அருள்தாஸ் வரவேற்றார். முடிவில், திருபுவனம் பட்டு கூட்டு றவு சங்க மேலாண் இயக்குநர் எஸ்.செல்வம் நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x