Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM
திருப்பூர்: தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) தலைவர் ஏ.சி.ஈஸ்வரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘தீபாவளி பண்டிகை நவம்பர் 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது. விரைவில் தீபாவளி போனஸ் வழங்க, பனியன் நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அந்தந்த நிறுவன நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, தங்கள் தொழிலாளர்களுடன் சுமூகமாகப்பேசி போனஸ் வழங்க வேண்டும். கடந்த காலங்களைப்போல அல்லாமல், போனஸ் வழங்குவது குறித்து எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT