Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

ஓசூர் பகுதியில் இடியுடன் கனமழை :

ஓசூர்

ஓசூர் வட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 40.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மாலை மற்றும் இரவு வேளைகளில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. காலை வேளையில் ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கமும், மதியம் 2 மணிக்கு பிறகு வானில் கார்மேகம் திரண்டு இடி, மின்னலுடன் கனமழையும் பெய்து வருகிறது.

நேற்று காலை ஓசூரில் 40.8 மி.மீ. மழை பதிவானது. அதேவேளையில் தேன்கனிக்கோட்டையில் 1 மி.மீ. மழையும், தளியில் 15 மி.மீ. மழையும், அஞ்செட்டியில் 3 மி.மீ. மழையும் பதிவானது. ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் மழை தீவிரமடைந்து வருவதால் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மழையால் மானாவாரியில் பயிரிட்டுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x