Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

மணலியில் ரவுடி கொலை :

சென்னையை அடுத்த மணலி எடப்பாளையம் ஜீவானந்தம் தெருவை சேந்தவர் குட்டி என்ற ராஜசேகரன் (27). இவர், மணலி காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்துள்ளார்.

அண்மையில் குற்ற வழக்கில் சிக்கி சிறைக்கு சென்று, ஒரு வாரத்துக்கு முன்புதான் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மணலி, சின்ன சேக்காட்டில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த கும்பல் ஒன்று ராஜசேகரனை பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியது. இதில் அவர் இறந்தார்.

இதுபற்றி போலீஸார் கூறும்போது, ‘‘மணலியைச் சேர்ந்த விக்கி, அவரது சகோதரர் சதீஷ்குமார் ஆகியோரை ராஜசேகரனும் அவரின் நண்பர்களும் தாக்கி செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த விக்கி, தனது கூட்டாளிகளுடன் சென்று ராஜசேகரனை கொலை செய்துள்ளதாக முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது.

கொலை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x