Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

சமுதாயக் கல்லூரியில் அக். 20 வரை சேரலாம் :

புதுவை பல்கலைக்கழக சமுதாயகல்லூரி முதல்வர் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

லாஸ்பேட்டையில் உள்ள புதுவை பல்கலைக்கழக சமுதாய கல்லூரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையவழியாக நடந்து வருகிறது. சேர்க்கை அவகாசம் வரும் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நாடகம், அரங்கக்கலை, கர்நாடக இசை, பரத நாட்டியம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. இளங்கலை பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர பிளஸ்-2 தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். சமுதாய கல்லூரி சேர்க்கை உதவி மையங்களை நேரடியாகவோ, இணையதளம் வழியாகவோ தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x