Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

வ.சுப்பையா நினைவு தினத்தில் பாரபட்சம் : அதிகாரிகளிடம் கம்யூனிஸ்ட் கட்சிகள் கேள்வி

புதுச்சேரி

வ.சுப்பையா நினைவு தினத்துக்கான ஏற்பாடு சரியாக இல்லாததால் அரசு அதிகாரிகளிடம் கம்யூனிஸ்ட் கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

புதுவை அரசின் சார்பில் வ.சுப்பையா நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லித்தோப்பு சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு செய்தித்துறை செயலர் வினயராஜ் மாலை அணிவித்தார்.

அதேநேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்திராகாந்தி சிலை அருகில் இருந்து ஊர்வலமாக சென்று சிலைக்கு மாலை அணிவித்தனர். அப்போது சிலைக்கு கீழே கட்டப்பட்டிருந்த வ.சுப்பையா நினைவு பேனரை அதிகாரிகள் கழற்றினர். இதனால் அங்கிருந்த செய்தித்துறை அதிகாரிகளிடம் கம்யூனிஸ்ட் கட்சியினர், “வழக்கமாக பிறந்தநாள், நினைவு நாளில் சிலைக்கு அருகில் பந்தல் போட்டு இருக்கைகள் போடப்படும். இம்முறை இருக்கைகள் அமைக்கவில்லை. சிலைக்கு கீழே இருந்த வ.சுப்பையா நினைவு பேனரையும் அப்புறப்படுத்தியது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அதிகாரிகள், “உள் ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்வதால் இதை செய்ய முடியவில்லை” என தெரிவித்தனர். “தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், நடத்தை விதிமுறைகளை தொடர்வது ஏன்? ” என கேள்வி எழுப்பினர். அதிகாரிகள் பதிலளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், முன்னாள் எம்எல்ஏ நாரா கலைநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரதேச செயலர் ராஜாங்கம் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், நடத்தை விதிமுறைகளை தொடர்வது ஏன்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x