தேனியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை :

தேனியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை :
Updated on
1 min read

தேனி வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் முரளிதரன் (55). இவர் மதுரையில் பணிபுரிந்தபோது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் கருப்பையா தலைமையில் தேனியில் நேற்று விசாரணை நடைபெற்றது. தேனி என்ஆர்டி நகரில் அவர் தங்கியிருந்த வீடு மற்றும் அவரது காரை சோதனை செய்தனர். போலீஸார் கூறுகையில், வழக்கு தொடர்பாக தொடர் விசாரணை நடந்தது. ஆய்வில் எதுவும் கைப்பற்றவில்லை என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in