Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM
தருமபுரி
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய பகுதிகளில் இன்று (13-ம் தேதி) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையம் கிருஷ்ணாபுரம் பீடரில் புதிய மின் பாதை அமைக்கும் பணி இன்று மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, இன்று காலை 10 முதல் பகல் 2 மணி வரை கிருஷ்ணாபுரம், புழுதிகரை, பி.மோட்டுப்பட்டி, காட்டம்பட்டி, சி.மோட்டுப்பட்டி, வகுத்துப்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தருமபுரி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT