Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

குமரி உள்ளாட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் :

கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டம் ஊராட்சி தலைவர் மற்றும் 9 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. முட்டம் ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதில் நிர்மலா வெற்றிபெற்றார். வெள்ளிச்சந்தை ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட சகாய பிரைட் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மகாராஜபுரம் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட சுயம்பு வெற்றிபெற்றார்.

லீபுரம் 4-வது வார்டில் ஜெகன் வெற்றிபெற்றார். பறக்கை 8-வது வார்டில் ஞானதிசானும், ஆத்திவிளை 3-வது வார்டில் மத்தியாஸ், திக்கணங்கோடு 6-வது வார்டில் இந்திரா ராணி, குமரன்குடி 1-வது வார்டில் லிபின் வினோஸ், சூழால் 1-வது வார்டில் விஜயகுமார், வெள்ளாங்கோடு 5-வது வார்டில் அஜிதாகுமாரி வெற்றி பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x