Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

குமரியில் மின் குறைதீர் நாள் கூட்டம் :

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் மின்கோட்ட அலுவலகங்களில் மின் நுகர்வோருக்கான குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

அரசின் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைப்படி மாதந்தோறும் இரண்டாவது செவ்வாய்கிழமை நாகர்கோவில் கோட்டத்திலும், 3-வது செவ்வாய் தக்கலை கோட்டத்திலும், நான்காவது செவ்வாய்க்கிழமை குழித்துறை கோட்டத்திலும் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள், விவசாயிகள், மின்நுகர்வோர் பங்கேற்று பயனடையலாம் என்று, மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x