Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

பாதாள சாக்கடை மூடிகள் தொடர் திருட்டு : பழைய இரும்பு கடைகளில் 20 மூடிகள் மீட்பு :

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் முக்கிய சாலைகளில் உள்ள பாதாள சாக்கடை மூடிகள் மற்றும் குடிநீர் குழாய் வால்வு மூடிகள் திருடப்பட்டு வந்தன. தாமோதர நகர் பிரதான சாலை, ஆசிரியர் காலனி உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 17 மூடிகள் திருடு போயின. மாநகராட்சி அதிகாரிகள் இதுதொடர்பாக தூத்துக்குடி நகர டிஎஸ்பி கணேஷிடம் புகார் அளித்தனர்.போலீஸார் துணையுடன் மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையர் சேகர், சுகாதார அலுவலர் ராஜசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று மாநகர பகுதிகளில் உள்ள பழைய இரும்பு கடைகளில் சோதனை நடத்தினர். 6 கடைகளில் சோதனை நடத்தப்பட்டதில் 4 கடைகளில் பாதாள சாக்கடை மூடிகள் மற்றும் குடிநீர் குழாய் வால்வு மூடிகள் கிடந்தன. பாதாள சாக்கடை மூடிகள் 5 மற்றும் குடிநீர் குழாய் வால்வு மூடிகள் 15 என, மொத்தம் 20 மூடிகள் மீட்கப்பட்டன. மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை மூடிகள் மற்றும் குடிநீர் குழாய் வால்வு மூடிகளை திருடும் கும்பலை பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x