பாஜக சார்பில் பேச்சுப் போட்டி :

பாஜக சார்பில் பேச்சுப் போட்டி  :
Updated on
1 min read

வ.உ.சியின் 150-வது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை போற்றும் வகையில், பாஜக சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியின் தகுதிச் சுற்று திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் கோட்டூர் ராகவன் தலைமை வகித்தார். மாநில மகளி ரணி செயலாளரும், வ.உ.சி. விழாக் குழு உறுப்பினருமான லீமா சிவகுமார் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கல்லூரி நிறுவனர் வெங்கட் ராஜுலு மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை வ.உ.சி. விழாக் குழுவின் எஸ்.கே.சதா சிவம் செய்திருந்தார். போட்டி யில் முதல் 3 இடங்களில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மைதீன், சாமிநாதன், பாண்டியன் ஆகியோர் பரிசுகளை வழங் கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in