Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

சிறுமியை காரில் கடத்தி பாலியல் தொல்லை: மெக்கானிக் கைது :

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் 17 வயது சிறுமி, அண்மையில் பள்ளிக்குச் செல்லும்போது பேருந்தை தவறவிட்டுள்ளார். இதையடுத்து, கீழவஸ்தா சாவடியைச் சேர்ந்த கார் மெக்கானிக்கான அக்பர் அலி(38) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் அச்சிறுமியை பெற்றோர் அனுப்பி வைத்துள்ளனர்.

பள்ளிக்கு செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்துவிட்டதாகக் கூறிய அக்பர் அலி, தனது மெக்கானிக் கடைக்குச் சென்று அங்கிருந்த கார் ஒன்றில் சிறுமியை ஏற்றிக்கொண்டு, பள்ளிக்குச் செல்லாமல் வேறு பாதையில் அழைத்துச் சென்று, மாலை வரை சிறுமிக்கு அக்பர்அலி பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், வீட்டுக்கு வந்த சிறுமி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தைக் கூறினார். இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து அக்பர் அலியை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x