Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த திறந்தவெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி :

காரைக்கால்: காரைக்கால் சைல்டு லைன் அமைப்பு சார்பில், சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த திறந்தவெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி திருமலைராயன்பட்டினம் வடகட்டளை பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, சைல்டு லைன் மைய ஒருங்கிணைப்பாளர் பி.விமலா தலைமை வகித்து நிகழ்ச்சியின் நோக்கம், பெண் குழந்தைகளை கருவிலிருந்து பாதுகாக்க வேண்டியதன் அவசியம், குழந்தைத் திருமணங் களை தடுத்து நிறுத்துவது, பாலியல் சுரண்டலிலிருந்து பாதுகாப்பது, பெண் குழந்தைகளை வன்கொடுமைகளிலிருந்து பாதுகாப்பதை சமூகக் கடமையாகக் கருதி உறுதி ஏற்பது உள்ளிட்டவை குறித்து எடுத்துக் கூறினார்.

வழக்கறிஞர்கள் சீமோன்ராஜ், கீர்த்திவாசன் ஆகியோர் சிறப்பு அழைப் பாளர்களாக பங்கேற்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், போக்ஸோ சட்டம், குழந்தைத் திருமண தடை சட்டம் உள்ளிட்டவை குறித்து விளக்கினர். அங்கன்வாடி ஊழியர் வசந்தி, பெண் குழந்தைகள் வளர்ப்பு மற்றும் அவர்களுக்கு கல்வி அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x