Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

ஓட்டப்பிடாரம் அருகே பெண் கொலை :

கோவில்பட்டி: ஓட்டப்பிடாரம் அருகே வடக்கு ஆவாரங்காடு கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பச்சைக்கிளி. இவரது மனைவி முத்துலட்சுமி(40). இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ராமர் (50). இவர்கள் இருவருக்கும் இடையே வீட்டின் பொதுச்சுவர் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. நேற்று மாலை 6 மணியளவில் முத்துலட்சுமி அவரது வீட்டு வாசலின் முன்பு துப்புரவு செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கும் ராமருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அரிவாளால் வெட்டியதில் முத்துலட்சுமி உயிரிழந்தார். ஓட்டப்பிடாரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து ராமரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x