Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

90 அடியை எட்டிய சாத்தனூர் அணை :

திருவண்ணாமலை

கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த 5 நாட்களாக தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால், 119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 90.45 அடியை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 1,227 கனஅடி தண்ணீர் வருகிறது.

அணையில் 2,503 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 3 மி.மீ., மழை பெய்துள்ளது. தென் பெண்ணை யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x