Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM
உத்தரபிரதேசத்தில் போராட்டத் தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது மத்திய அமைச்சரின் மகன் கார் ஏற்றி கொலை செய்ததை கண்டித்தும், இந்த சம்பவத்தில் மத்திய மற்றும் உத்தரபிரதேச பாஜக அரசு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் புதுவை பிரதேச காங்கிரஸ் சார்பில் நேற்று மவுன விரத போராட்டம் நடைபெற்றது.
சுதேசி மில் அருகே நடந்த போராட்டத்துக்கு மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன், நீலகங்காதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT