Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மேலகாந்தி நகரில் உள்ள பொது சுகாதார வளாகத்தின் பின்புறம் கழிவுநீர் ஓடையில் துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது ஆண் சடலம் ஒன்று கிடந்தது. சாத்தூர் நகர் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர், தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனர். இறந்து கிடந்தவருக்கு சுமார் 45 முதல் 50 வயது இருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். அவர் யார் என்பது குறித்து சாத்தூர் நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT