Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

ஒகேனக்கல் பகுதியில் 46 மில்லி மீட்டர் மழை :

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் நேற்று முன் தினம் இரவு 46 மில்லி மீட்டர் மழை பெய்தது.

தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன் தினம் இரவு கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒகேனக்கல் பகுதியில் 46.40 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதுதவிர, பென்னாகரம் பகுதியில் 18 மில்லி மீட்டர், தருமபுரி பகுதியில் 5 மில்லி மீட்டர், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 3 மில்லி மீட்டர் மழை பதிவானது. ஒகேனக்கல் பகுதியில் 46.40 மில்லி மீட்டர் மழை பதிவானதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. கனமழையால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேபோல, நேற்று மாலை தருமபுரி நகரிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x