Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

10 பேருக்கு இலவச தையல் இயந்திரம் :

கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத் திறனாளி, முதியோர், விதவையர் உதவித்தொகை போன்ற பல நலத்திட்ட உதவிகள் கோரி 364 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் அறிவுறுத்தினார்.

கிள்ளியூர் வட்டம் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் கடந்த ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரது மனைவி ஜாக்குலினுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் 10 பேருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவபிரியா, தனித்துணை ஆட்சியர் திருப்பதி, சமூகநல அலுவலர் சரோஜினி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x