Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

மனைவி கொலை: தொழிலாளி கைது :

குலசேகரன்பட்டினம் கருங்காலியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் க.சுடலை (70). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவரது மனைவி முத்தம்மாள் (65). இவர்களுக்கு 1 மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. சுடலையும், முத்தம்மாளும் மட்டும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் சுடலை வைத்திருந்த ரூ.500-ஐ காணவில்லையாம். இதனை கேட்டு மனைவியிடம் நேற்றுமுன்தினம் இரவில் தகராறு செய்துள்ளார். அரிவாளால் வெட்டியதில் முத்தம்மாள் மரணமடைந்தார். குலசேகரன்பட்டினம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சுடலையை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x