Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM
நாகர்கோவில் மாநகராட்சியை விரிவாக்கம் செய்வதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சியுடன் பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்கள் இணைக்கப்படவுள்ளன. கிராமங்களை மாநகராட்சியுடன் இணைப்பதால் கிராமப்புறங்களுக்கு கிடைக்கும் சில அரசு நலத் திட்டங்கள் கிடைக்காமல் போவதுடன், வரியும் அதிகரிக்கும் எனக் கூறி கருத்துகேட்பு கூட்டங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று திரண்ட ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிராமப்புற ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் முத்து சரவணன் தலைமை வகித்தார். ராஜேஷ்குமார் எம்எல்ஏ, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியண்ட் தாஸ், மற்றும் ராஜாக்கமங்கலம், சங்கரன்குழி, எள்ளுவிளை, தர்மபுரம், புத்தேரி, தேரேக்கால்புதூர், கணியாகுளம் பகுதி மக்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT