Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM

டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் :

டாஸ்மாக் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கோவில்பட்டியில் வட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் ஒரகடம் பகுதி டாஸ்மாக் விற்பனையாளர் துளசிதாஸ் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும். கொலையான ஊழியர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம், வாரிசு வேலை வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாநில துணைத் தலைவர் மே.மரகத லிங்கம் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட தலைவர் பி.சத்திய மூர்த்தி, தூத்துக்குடி மாவட்ட தலைவர் கே.வெங்கடேசன், தென்காசி மாவட்ட தலைவர் கண்ணன், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே.செந்தில்வேலன் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் க.முருகானந்தம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x