மாயமான இளைஞர் கொன்று புதைப்பு : நெல்லையில் சடலம் தோண்டியெடுப்பு

மாயமான இளைஞர் கொன்று புதைப்பு :  நெல்லையில் சடலம் தோண்டியெடுப்பு
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மாயமான இளைஞரை கொலை செய்து, திருநெல்வேலி அருகே உடலைபுதைத்தது தெரிய வந்துள்ளது. சடலத்தை போலீஸார் நேற்று தோண்டியெடுத்தனர்.

பாவூர்சத்திரம் அருகே சிவகாமி புரத்தை சேர்ந்த பூ வியாபாரி முருகேசன் மகன் ஜெகதீஷ் (23). பூ கட்டும் தொழிலில் தந்தைக்கு உதவி செய்துவந்தார். கடந்த 5-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெகதீஷ் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து பாவூர்சத்திரம் போலீஸார் விசா ரித்து வந்தனர். இந்நிலையில் ஜெகதீஷை கண்டுபிடிக்க வலியுறுத்தி சிவகாமிபுரம் விலக்கில் அவரது உறவினர்கள் 2 நாட்களுக்குமுன் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த சில நாட்களுக்குமுன் நண்பர்களுடன் மது குடித்தபோது, குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஜெகதீஷ் கொலை செய்யப்பட்டு, பாளையங்கோட்டை அருகே டக்கரம்மாள்புரம் பகுதியில் புதைக்கப்பட்டது தனிப்படை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் டக்கரம்மாள்புரம் பகுதியிலிருந்து ஜெகதீஷின் சடலம் நேற்று தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை க்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in