இளைஞர் எரித்து கொலை? : போலீஸார் தீவிர விசாரணை

இளைஞர் எரித்து கொலை? :  போலீஸார் தீவிர விசாரணை
Updated on
1 min read

மீஞ்சூர் அருகே ஏரிக்கரையில் தீக்குளித்த இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரை யாராவது உயிருடன் எரித்துக் கொல்ல முயன்றார்களா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே நாலூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் இருந்து நேற்று முன்தினம் உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் வந்த இளைஞர், ‘என்னை 6 பேர் தீ வைத்துஎரித்துவிட்டனர்; காப்பாற்றுங்கள்’ எனக் கூறி அலறியபடி ஓடி வந்துள்ளார்.

அவரது சத்தத்தைக் கேட்டகிராம மக்கள் ஓடி வந்து, தீக்காயங்களுடன் இருந்த அந்த நபரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து, மீஞ்சூர் போலீஸார் விசாரணை நடத்தியதில், இறந்த நபர் நாலூர் கிராமம், பெருமாள் கோயில்தெருவை சேர்ந்த லோகநாதன்(33) என்பதும், இவருக்கு பலபெண்களுடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.

இதனால், யாராவது அவரை தீ வைத்து எரித்தார்களா அல்லது தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in