நெல்லை, தென்காசி உட்பட 4 மாவட்டங்களில் 2,695 மையங்களில் - 5-வது கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் :

நெல்லை, தென்காசி  உட்பட 4 மாவட்டங்களில் 2,695 மையங்களில்  -  5-வது கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்  :
Updated on
1 min read

தமிழகத்தில் ஐந்தாவதுகட்டமாக நேற்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் 750 மையங்களில் இம்முகாம் நடைபெற்றது. வண்ணார் பேட்டையில் நடைபெற்ற சிறப்பு முகாமை ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார். பின்னர், பரணி நகரில் தடுப்பூசியின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தென்காசி

தூத்துக்குடி

கன்னியாகுமரி

தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளமடம் அரசு ஆரம்பப் பள்ளி, தோவாளை அரசு தொடக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, ஆரல்வாய் மொழி அரசு மேல்நிலைப் பள்ளி உட்பட பல இடங்களில் நடந்த சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறும்போது, ‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் 5-வது கட்ட கரோனா மெகா தடுப்பூசி முகாம்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம்.

இதற்கு முன்பு ஏற்கெனவே நடந்த 4 தடுப்பூசி முகாம்களில் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மாவட்டத்தில் இதுவரை முதல்கட்டமாக 9,95,687 பேருக்கும், இரண்டாம் கட்டமாக 3,06,162 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்தாத நபர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த ஊரக வளர்ச்சி முகமை, சுகாதாரப் பணியாளர்கள், பள்ளி கல்வித்துறை ஊழியர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in