சேத்துப்பட்டு அருகே - சாலை விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு :

சேத்துப்பட்டு அருகே  -  சாலை விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு  :
Updated on
1 min read

சேத்துப்பட்டு அருகே மாமியாரின் இறுதி சடங்கில் பங்கேற்ற மருமகன், லாரி மோதியதில் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட் டம் சேத்துப்பட்டு அடுத்த செவரப்பூண்டி கிராமத்தில் வசித்தவர் ராஜா(50). தனியார் பள்ளி வாகன ஓட்டுநர். இவர், சேத்துப்பட்டு அடுத்த மடுவாங்கரை கிராமத்தில் உயிரிழந்த மாமியாரின் இறுதி சடங்கில் பங்கேற்றுவிட்டு, சாலையில் நின்று உறவினர் களுடன் நேற்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ் வழியாக சென்ற லாரி மோதியதில், அவர் உயிரிழந்தார்.

இது குறித்து சேத்துப்பட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in