Published : 11 Oct 2021 03:15 AM
Last Updated : 11 Oct 2021 03:15 AM

தி.மலையில் குறைதீர்வு கூட்டம் :

திருவண்ணாமலை

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 3-ம் பாலினத்தவர்களுக்கான குறைதீர்வு கூட்டம் தி.மலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் நடைபெற்றது.

தி.மலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் 3-ம் பாலினத்தவர் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் தலைமை வகித்தார். புதிய ரேஷன் அட்டை வழங்கவும், ஏற்கெனவே பெறப்பட்டுள்ள ரேஷன் அட்டையில் திருத்தம், முகவரி மாற்றம் செய்து கொடுக்க வலியுறுத்தி 3-ம் பாலினத்தவர்கள் வலியுறுத்தினர். மேலும் அவர்கள், ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதில், வருவாய் ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, தினேஷ்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர். 3-ம் பாலினத்தவருக்கான குறைதீர்வு கூட்டத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மனு அளித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x