Published : 10 Oct 2021 03:17 AM
Last Updated : 10 Oct 2021 03:17 AM

வாக்குச் சாவடிகளில் : எஸ்பி நேரில் ஆய்வு :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர்நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், பெரும்புதூர் ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலையொட்டி 600-க்கும் மேற்பட்ட போலீஸார்பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். அதிரடிப்படையினரும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தேர்தல் நடைபெறும் இடங்களில் நேரில் சென்றுஆய்வு செய்தார். குன்றத்தூர், பெரும்புதூர் வாக்குச் சாவடிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார். பதற்றமான பகுதிகளில் கூடுதல் கவனத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x