பெண்ணிடம் 7 பவுன் பறிப்பு :

பெண்ணிடம்  7 பவுன் பறிப்பு :
Updated on
1 min read

அருப்புக்கோட்டையில் பெண்ணிடம் 7 பவுன் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸார் தேடிவருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அஜிஸ் நகரைச் சேர்ந்த ராஜசேகர் மனைவி சித்ரா (46). இவர் தனது வீட்டை ஒட்டியுள்ள கடைக்கு முன் நின்று நேற்று மொபைல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக நடந்துசென்ற இளைஞர் ஒருவர் சித்ரா அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடினார்.

இதுகுறித்து, சித்ரா கொடுத்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in