தூத்துக்குடி மாவட்டத்தில் - ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது :

தூத்துக்குடி மாவட்டத்தில்   -  ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது  :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்த சிவபெருமாள் (45) என்பவர் கொலை வழக்கில், தூத்துக்குடி திம்மையார் காலனியைச் சேர்ந்த மாடசாமி மகன்கள் ஆறுமுகம் (31), சொர்ணராஜ் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாளமுத்துநகர் சுனாமி காலனி நிர்மல்குமார் (38), வைகுண்டம் அங்கமங்கலம் அண்ணாநகரைச் சேர்ந்த முத்துக்குமார் (42) ஆகியோர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக் குமார் பரிந்துரையின்படி, இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.

4 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in