சாத்தனூர் அணைக்கு : நீர்வரத்து அதிகரிப்பு :

சாத்தனூர் அணைக்கு  : நீர்வரத்து அதிகரிப்பு :
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட் டத்தில் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரி நீர் வெளி யேற்றப்படுவதால், தென் பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தி.மலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 833 கனஅடி தண்ணீர் வருகிறது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 87.10 அடியாக உள்ளது. அணையில் 2,148 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 14 மி.மீ., மழை பெய்துள்ளது.

தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட் டுள்ளதால், கரையோரத்தில் வசிக்கும் கிராம மக்க ளுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in