ஆயுதபூஜையை முன்னிட்டுசிறப்பு பேருந்துகள் இயக்கம் :

ஆயுதபூஜையை முன்னிட்டுசிறப்பு பேருந்துகள் இயக்கம் :
Updated on
1 min read

ஆயுத பூஜையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து பயணிகள் மற்றும் தொழிலாளர்கள், வெளியூர் செல்ல வசதியாக, 40 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வரும் 14-ம் தேதி ஆயுத பூஜை, 15-ல் விஜயதசமி, அடுத்தஇருநாட்கள் சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக விடுமுறை தினங்கள் வருகின்றன. இதையொட்டி, திருப்பூரில் இருந்து பயணிகள் வெளியூர் செல்ல வசதியாக, 13-ம் தேதி இரவு முதல் 16-ம் தேதி இரவு வரை, 40 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. திருச்சி, மதுரை, தேனி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும், கூட்டம் அதிகரித்தால், தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in