உள்ளாட்சி தேர்தல் - சிவகங்கை மாவட்டத்தில் இன்று வாக்குப் பதிவு :

உள்ளாட்சி தேர்தல் -  சிவகங்கை மாவட்டத்தில் இன்று வாக்குப் பதிவு :
Updated on
1 min read

உள்ளாட்சித் தேர்தலையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் 15 பதவி களுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

சிவகங்கை மாவட்டத்தில் கண்ணங்குடி ஒன்றிய 3-வது வார்டு கவுன்சிலர், காளையார்கோவில் ஒன்றிய 6-வது வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கும், சிவகங்கை ஒன்றியத்தில் 2 ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும், 12 ஒன்றியங் களில் 34 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 34 வார்டு உறுப்பினர் பதவிகளில் 23 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து 2 ஒன்றியக் கவுன்சிலர், 2 ஊராட்சித் தலைவர், 11 வார்டு உறுப்பினர் என மொத்தம் 15 பதவியிடங்களுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இதில் மொத்தம் 43 பேர் போட்டி யிடுகின்றனர். மொத்தம் 16,793 பேர் வாக்களிக்க உள்ளனர். இத் தேர்தல் நடக்க உள்ள பகுதிகளில் நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in