கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து : வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை

கூடுதல் விலைக்கு  உரம் விற்றால் உரிமம் ரத்து :  வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை
Updated on
1 min read

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பு ராபி பருவ பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் யூரியா 2,863 மெ.டன், டிஏபி 1,091 மெ.டன், பொட்டாஷ் 1,021 மெ.டன், காம்பளக்ஸ் 6,163 மெ.டன் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உர விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு ஆதார் அட்டையுடன் சாகுபடி பரப்பிற்கு தேவைப்படும் அளவில் மட்டுமே உரம் விநியோகம் செய்ய வேண்டும்.

விற்பனையாளர்கள் இருப்பு பதிவேடுகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை விட அதிக விலைக்கு உரம் விற்றாலோ, உரிய ஆவணமின்றி உர விற்பனையில் ஈடுபட்டாலோ, விற்பனை செய்த உரங்களுக்கு உரிய ரசீது வழங்கவில்லை என்றாலோ விற்பனை உரிமத்தில் உள்ள முதன்மை சான்றுகள் தவிர பிற உரங்களை விற்பனை செய்தாலோ, உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி, உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in