பாஜகவினர் 350 பேர் மீது வழக்கு :

பாஜகவினர் 350 பேர் மீது வழக்கு :
Updated on
1 min read

தமிழகத்தில் கோயில்களை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறக்க வலியுறுத்தி திருச்செந்தூர் பேருந்து நிலையம் முன்பு பாஜகவினர் நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவரும், சட்டப்பேரவை குழு தலைவருமான நயினார் நாகேந்திரன், விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், தேசிய செயற்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா, வர்த்தக அணி மாநில தலைவர் ராஜகண்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சிவமுருக ஆதித்தன், இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றால நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கரோனா நோய் தொற்று பரவும் வகையில் நடந்து கொண்டதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்ட 350 பேர் மீதுதிருச்செந்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in