ராமநாதபுரத்தில் புதிய ஜவுளி கடை திறப்பு :

சோமசுந்தரம்
சோமசுந்தரம்
Updated on
1 min read

ராமநாதபுரம் அக்ரஹாரம் சாலையில் அல் ஃபரீதா குரூப்பின் புதிய ஜவுளி நிறுவனமான அல் ஃபரீதா சில்க்ஸ் விற்பனையகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. நிர்வாக இயக்குநர் அபுல் கலாம் வரவேற்றார்.

அல் ஃபரீதாசில்க்ஸ் ஜவுளிக் கடையை ராமநாதபுரம் எம்எல்ஏ முத்துராமலிங்கம் திறந்து வைத்தார். பெண்களுக்கான பட்டு ஜவுளி பிரிவை ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, சிறுமிகளுக்கான பிரிவை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஆண்களுக்கான ரெடிமேட் பிரிவை மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, சிறுவர்களுக்கான பிரிவை மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டியன் மற்றும் வழுதூர் ஜமாத் நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர்.

கடை வாசலில் அமைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கான இலவச குடிநீர் விநியோகப்பிரிவை திமுக முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பி.டி.ராஜா, அல்ஃபரீதா மேலாளர் அம்பிகாவதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் சாத்தான்குளம் ஜமாத் தலைவர் காபாத்துல்லா, திமுக நகர செயலாளர்கள் கார்மேகம், பிரவீன் தங்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அல்பரிதா நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் நசுருதீன் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in