

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பதவி களை வரும் நவம்பர் இறுதிக்குள் நிரப்ப வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட 28 முக்கியப் பதவிகள் காலியாக உள்ளதாகவும், எனவே இந்த பதவிகளை உடனடியாக நிரப்ப உத்தரவிடக்கோரியும், இந்த நியமனங்கள் அவ்வப்போது தற்காலிகமாக நியமிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரி யரல்லா ஊழியர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள், இந்த காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்பது குறித்து பல்கலைக்கழகம் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்வு கட்டுப் பாட்டாளர் பதவிக்கு 23 பேரும், பதிவாளர் பதவிக்கு 36 பேரும் தேர்வு பட்டியலில் உள்ளதாகவும், நேர்முகத்தேர்வு நடத்தி நியமனம் செய்ய 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என பல்கலைக்கழகம் சார்பில் கோரப்பட்டது.
விசாரணை தள்ளிவைப்பு