Published : 07 Oct 2021 03:14 AM
Last Updated : 07 Oct 2021 03:14 AM

புதுச்சத்திரம் அருகே கொத்தட்டையில் - 3 டன் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் :

புதுச்சத்திரம் அருகே கொத்தட்டை யில் அரசால் தடை செய்யப்பட்ட 3 டன் புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சத்திரம் அருகே உள்ள கொத்தட்டை கிராமத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பெருமளவில் பதுக்கி வைத்திருப்பதாக எஸ்பி சக்திகணேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை எஸ்பி சக்திகணேசன் தலைமையிலான தனிப்படையினர், சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் புதுச்சத்திரம் வினோதா,பரங்கிப்பேட்டை தேவி மற்றும் போலீஸார் கொத்தட்டை கிராமத்துக்கு சென்றனர். கடலூர்- சிதம்பரம் ரோட்டில் உள்ள இளவரசன் என்ற இளங்கோவனுக்கு(44) சொந்தமான கடையில் சோதனை செய்தனர். அப்போது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசால், ஹான்ஸ் உள்ளிட்ட பல்வேறு புகையிலைப் பொருள்கள் 3 டன் 70 கிலோ பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இளவரசன் என்ற இளங்கோவனை கைது செய்தனர். 3 டன் 70 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 19 லட்சத்து 25 ஆயிரத்து 298 ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x