Published : 07 Oct 2021 03:14 AM
Last Updated : 07 Oct 2021 03:14 AM

திண்டுக்கல்லில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது :

திண்டுக்கல்லில் கடந்த 15-ம் தேதி திமுக பிரமுகர் பாபுமீரானை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றது. படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் கிழக்கு ரத வீதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் மோகன்ராஜ் (32) மற்றும் இவரது கூட்டாளிகளான சஞ்சய் குமார் (21), செட்டியபட்டியைச் சேர்ந்த சிவசூரியன் (23), திண்டுக்கல் ஆர்.எம்.காலனியைச் சேர்ந்த அப்துல் லத்தீப்(33) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியருக்கு எஸ்.பி பரிந்துரை செய்தார். அதையேற்று ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து மோகன்ராஜ் உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x