Published : 06 Oct 2021 03:12 AM
Last Updated : 06 Oct 2021 03:12 AM

ஏராளமானநெல் மூட்டைகள் மழையில் சேதம் :

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கட்டவாக்கம் பகுதியில் திறந்த வெளி நெல் சேமிப்பு மையம் இயங்கி வருகிறது. இந்த சேமிப்பு மையத்தில் நேரடி நெல் கொள்முதல் மையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்ட நெல் சேமித்து வைக்கப்படுகிறது. சுமார் 25 ஆயிரம் மூட்டைகள் இந்த மையத்தில் இருந்தன.

இவை சரிவர மூடப்படாததால் மழையில்நனைந்து ஆயிரக்கணக்கான மூட்டைகள் சேதமடைந்துள்ளன. நெல்லை முறையாக பாதுகாக்க பெரிய கிடங்குகளை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x