Published : 06 Oct 2021 03:13 AM
Last Updated : 06 Oct 2021 03:13 AM

போலீஸார் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் :

திண்டுக்கல்லில் போலீஸாரின் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸாருக்கு கூடுதல் ரோந்து இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் இருந்து போலீஸாரின் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட எஸ்.பி. வி.ஆர்.சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ் பெக்டர்கள், போலீஸார் இதில் ஹெல்மெட் அணிந்து பங்கேற்றனர்.

பின்னர் எஸ்பி கூறியதாவது: வாகன விபத்து ஏற்படும்போது உடனடியாக விபத்து நடந்த இடத்துக்குச் சென்று உதவுவது, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் உடனடியாகச் சென்று போக்குவரத்தைச் சீரமைப்பது, பள்ளி, கல்லூரிகள் தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, அந்தந்த எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் செயல்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகிய பணிகளை இருசக்கர வாகனங்களில் சென்று போலீஸார் மேற்கொள்வர். இவ்வாறு எஸ்பி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x