Published : 06 Oct 2021 03:14 AM
Last Updated : 06 Oct 2021 03:14 AM

உத்தர பிரதேச வன்முறை சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் :

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்தும், சம்பவ இடத்துக்குச் செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் காங் கிரஸ் கட்சியினர் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு கட்சியின் மாநில துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசினார். நகரச் செயலாளர் எஸ்.எம்.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி யின் மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் கண்டன உரையாற்றினார். இதில், திரளானோர் கலந்து கொண்டனர்.

கரூர் தாந்தோணிமலை காந்தி சிலை முன் காங்கிரஸ் மாவட்ட முன்னாள் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிர்வா கிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்டத் தலைவர் முருகேசன், தெற்கு மாவட்டத் தலைவர் ராம.சுப்புராம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில், கட்சியின் நகரத் தலைவர் இப்ராகிம்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் துணைத் தலைவர் கக்கரை ஆர்.சுகுமாரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, தஞ்சாவூர் ரயிலடியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அதன் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார். இதில், மாநிலப் பொதுச் செயலாளர் திருச்சி எம்.சரவணன், முன்னாள் எம்எல்ஏ சிங்காரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்துக்கு, மாநில பொதுக் குழு உறுப்பினர் ராமலிங்கம் தலைமை வகித்தார். மாநில விவசாய பிரிவு செயலாளர் மீரா ஹூசைன் முன்னிலை வகித்தார். நாகூர் நகரத் தலைவர் சர்புதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் எம்எல்ஏ ராஜகுமார் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x