Published : 05 Oct 2021 03:14 AM
Last Updated : 05 Oct 2021 03:14 AM

விழிப்புணர்வு பிரச்சாரம் :

திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கிராமங்களில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று தொடங்கியது.

திருநெல்வேலியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீர் அகமது விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நீதிபதிகள்ஜி.விஜயகுமார், எம். அன்புசெல்வி, வி.எஸ். குமரேசன், ஏ. தீபா,எஸ். சமீனா, ஏ. அமிர்தவேலு, ஜி. இசக்கியப்பன், ஏ. பிஸ்மிதா, வான்முகில் அமைப்பின் இயக்குநர் பிரிட்டோ, ஒருங்கிணைப்பாளர் ராஜ், வழக்கறிஞர் சங்க செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மாரியப்ப காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x