டெங்கு புழுக்களை உற்பத்தி செய்தால் : அபராதம் :

டெங்கு புழுக்களை உற்பத்தி செய்தால் : அபராதம் :
Updated on
1 min read

திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

டெங்கு கொசுப்புழுக்களை உற்பத்தி செய்யும் இடங்களாக கண்டறியப்படும் வீடுகளுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரையும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.500 முதல் ரூ.15 ஆயிரம் வரையும், குறு, சிறு கடைகளுக்கு ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரையும், ஆயிரம் மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், ஹோட்டல்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும், வணிக வளாகம், அரசு கட்டிடங்கள், தொழிற்சாலைகளுக்கு ரூ.10ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையும் அபராதமும் விதிக்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in