சுகாதார பணியாளர்கள்72 பேருக்கு பாராட்டு :

சுகாதார பணியாளர்கள்72 பேருக்கு பாராட்டு :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், நகராட்சி ஆணையர் (பொ) ராஜகோபால், 72 சுகாதாரப் பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். சுகாதார ஆய்வாளர் அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in