Published : 03 Oct 2021 03:11 AM
Last Updated : 03 Oct 2021 03:11 AM

பசுந்தேயிலை கிலோ ரூ.14.74 தேயிலை வாரியம் அறிவிப்பு :

நீலகிரி மாவட்டத்தில் விளையும் பசுந்தேயிலைக்கு கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.14.74 நிர்ணயித்து தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேயிலை வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

நீலகிரி மாவட்டத்தில் சிறு விவசாயிகளிடம் இருந்து தேயிலை தொழிற்சாலைகள் கொள்முதல்செய்யும் பசுந்தேயிலைக்கான விலையை மாதந்தோறும் இந்திய தேயிலை வாரியம் நிர்ணயம் செய்து வருகிறது.

அக்டோபர் மாதத்தில் சிறு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப் படும் ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு குறைந்தபட்சம் ரூ.14.74 வழங்க வேண்டும்.

இந்த குறைந்தபட்ச விலையை தொழிற்சாலைகள் முறையாக வழங்குகிறதா என்பதை தேயிலை வளர்ச்சி வாரிய அலுவலர்கள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், துணை இயக்குநர்கள் கண்காணிக்க வேண்டும். குறைந்தபட்ச விலையை வழங்காத தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x