லாரி உரிமையாளர் வெட்டி கொலை :

லாரி உரிமையாளர் வெட்டி கொலை :
Updated on
1 min read

விருதுநகர் அல்லம்பட்டி ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி(55). விருதுநகர் ரயில் நிலையம் அருகே லாரி செட் நடத்தி வந்தார்.

இங்கு வேலை பார்த்த சுமைத்தொழிலாளி ஒருவரை ஓராண்டுக்கு முன்பு வேலை யில் இருந்து நிறுத்தியுள் ளார். இது தொடர்பாக பால்பாண்டிக்கும், சுமைத் தொழிலாளிக்கும் விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விருதுநகர் ரயில்வே பீடர் சாலையில் நேற்று முன்தினம் இரவு பால்பாண்டி மோட்டார் சைக்கிளில் சென்ற போது அவரை மர்ம நபர்கள் இருவர் கீழே தள்ளி வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். இதுதொடர்பாக விருதுநகர் மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுமைத் தொழிலாளர்கள் இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in