Published : 03 Oct 2021 03:13 AM
Last Updated : 03 Oct 2021 03:13 AM

தூத்துக்குடியில் சட்ட விழிப்புணர்வு பேரணி :

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் 25-ம் ஆண்டை கொண்டாடும் விதமாக, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தூத்துக்குடியில்‌ நேற்று சட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி (பொறுப்பு) பாண்டியராஜ் தலைமை வகித்தார். எஸ்பி ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். பேரணி தூத்துக்குடி 2-ம் கேட் முன்பிருந்து தொடங்கி, 1-ம் கேட் காந்தி சிலை முன்பு நிறைவடைந்தது. தொடர்ந்து அனைவரும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி பிலிப்ஸ் நிக்கோலஸ் அலெக்ஸ், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் செல்வக்குமார், டவுன் டிஎஸ்பி கணேஷ் மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பிரீத்தா செய்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x