Published : 03 Oct 2021 03:13 AM
Last Updated : 03 Oct 2021 03:13 AM

அண்ணாவின் மாநில சுயாட்சி கோரிக்கை நியாயமானது : மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆதரவு

வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பொய்கையில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் மழையில் நனைந்தபடி பேசும் பாமக மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ். படம்:வி.எம்.மணிநாதன்.

வேலூர்/ராணிப்பேட்டை

அண்ணாவின் மாநில சுயாட்சி கோரிக்கை நியாயமானது. அதனால் தான் அந்த கோரிக்கையை பாமக வரவேற்கிறது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சுமைதாங்கியில் பாமக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அக்கட்சியின் இளை ஞரணி மாநிலத் தலைவர் மருத்து வர் அன்புமணி ராமதாஸ் நேற்று பேசும்போது, ‘‘தமிழகத்தில் மாற் றத்தை கொண்டு வருவோம்.ஜனநாயகத்தின் அடித்தளமான உள்ளாட்சி தேர்தல் சட்டப்பேரவையை விட வலிமையானது. ஆகவே, இந்த உள்ளாட்சி தேர்தலில் நல்லவர்களையும் வலிமையானவர்களையும் தேர்வு செய்யுங்கள்.

கடந்த முறை உள்ளாட்சி தேர்தலில் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்தோம். அவர்கள் 25 இடங்களில் இரண்டு இடங்கள் மட்டும் கொடுத்தார்கள். அங்கும் போட்டி வேட்பாளர்களை நிறுத்தினார்கள். அதனால்தான் நாம் தற்போது தனித்து போட்டியிடுகிறோம். அரை நூற்றாண்டு காலம் உழைத்துதான் ஸ்டாலின் முதல்வர் கனவை நினைவாக்கினார். அதேபோல் பாமகவும் தனது கனவை நினைவாக்க பாடுபடுகிறது.

மாநில சுயாட்சி கோரிக்கையை அண்ணா முன் வைத்தார். அது நியாயமானதுதான். அதனால் தான் பாமக அந்த கோரிக்கையை வரவேற்கிறது. மாநில பட்டியலில் கல்வி இருந்திருந்தால் இன்று ‘நீட்’ தேர்வு பிரச்சினை வந்திருக்கிறது. நீட் தேர்வு கிராமப்புற மாணவர் களுக்கும் சமூக நீதிக்கும் எதிரானது.

வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஆதரவளிக்கிறது’’ இவ்வாறு அவர் பேசினார்.

வேலூர் மாவட்டம்

வேலூர் அடுத்த பொய்கை சந்தைப் பகுதியில் கொட்டும் மழையில் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரத்தில் பேசும்போது, ‘‘சாதாரண ஊரக உள்ளாட்சி தேர்தல் என நினைக்க வேண்டாம். நான் எம்பியாக இருக்கிறேன். எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ரூ.5 கோடி தொகுதி நிதி இருக்கும். அதையும் பிடுங்கி விட்டார்கள். எம்எல்ஏக்களுக்கும் அதிகாரம் கிடையாது. சட்டப்பேரவையில் பேசலாம் அவ்வளவுதான். ஆனால், ஊராட்சி மன்ற தலைவருக்குத்தான் அதிகாரம் உள்ளது. கிராம சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால் அதை எந்த அதிகாரியாக இருந்தாலும் செய்து முடிக்க வேண்டும். ஸ்டாலின் நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்து முதல மைச்சரானார். அவரது ஆசைநிறைவேறிவிட்டது.

அதற்கு அடுத்தது நாம்தான். அடுத்தது பாமக ஆட்சிதான். தீபாவளி முடிந்ததும் ஊர், ஊராக வரப்போகிறேன். பெரிய கூட்டம் போட்டு கல்வி, சுகாதாரம், விவசாயம் எப்படி இருக்க வேண்டும் என்றும் மது ஒழிப்பு எப்படி கொண்டு வருவோம் என சொல்லப் போகிறேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x